‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எல்லம்பாளையம் கிராமத்திற்கு சென்றார். அங்கு செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
மக்களிடம் பேசிய கமல்ஹாசன், கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும், மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.
படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகராத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தைக் நோக்கி நகர வேண்டும், நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்துவிட்டது. அதுதான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், இந்த சிறிய கிராமத்தில் பெரிய பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம், ஒரு லட்சம் மரக்கன்றுகள், மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தத்தெடுத்த 8 கிராமங்களில் இதுவும் ஒன்று. கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறோம். புதைக்கப்பட்டுள்ள கிராம சபை கூட்டங்களை தோண்டி எடுத்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
தொடர்ந்து கிராம மக்களுடன் இணைந்து ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் கமல்ஹாசன்.